லக்னோ:
உத்தரப்பிரதேசம், திரிபுரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் 28-வது ஆளுநராக குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேல் திங்களன்று பதவி ஏற்றார். அவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகோவிந்த் மாத்தூர் பதவி பிரமாணமும் ரகசிய காப்புறுதி பிரமாணமும்செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்,முன்னாள் ஆளுநர் ராம் நாயக் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.